பேரழிவில் உலகம்-நடுகடலில் வெடிக்க போகும் திடீர் போர்: பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி கருத்து
போர் விடயங்களை துக்கியமாக கணிக்கும் இந்திய (India) ஜோதிடக் கலைஞரின் அமெரிக்கா (United States) குறித்த சில கணிப்புக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைப்படும் குஷால் குமார் (Kushal Kumar) எனும் பிரபலமான ஜோதிடக் கலைஞரே இவ்வாறான கணிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், ஒன்றையொன்று எதிர்க்கும் நாடுகளின் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் கொண்ட புதுமையான போர் உத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப உயர்தர ஆயுதங்கள் அமெரிக்காவால் உருவாக்கப்படலாம் அல்லது வெளிக்கொணரப்படலாம் என அவர் முன்பே தெரிவித்திருந்தார்.
வான் பாதுகாப்பு
அத்தோடு, இத்தகைய ஆயுதங்கள் வான் பாதுகாப்பு அல்லது விண்வெளி பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவம் பெரிய நிதி முதலீடு அல்லது செலவு நடக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், இந்த மாதமும் அடுத்த மாதமும் அமெரிக்கா கூட்டாளிகளை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆளும் ஆட்சியாளர்
இந்தநிலையில், தற்போது அவர் தெரிவித்தது போலவே ஈரானை ஆளும் ஆட்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில் அமெரிக்காவும் இணைந்துகொண்டுள்ளது.
அத்தோடு, இந்த ஆண்டில் அமெரிக்கா ஒரு போரை எதிகொள்ளும் என்றும் ஆனால் அது நிலத்தில் நடக்காது என்றும் குமார் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் பத்தாம் திகதி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த நாட்டிற்கு எதிராக ட்ரம்ப் கடலில் ஒரு போரை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் குறித்த ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சொத்துக்கள்
கடல் அல்லது விண்வெளியில் மிகப்பெரிய வணிக மதிப்பைக் கொண்ட சில சொத்துக்கள் அறியப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம் அல்லது அடையாளம் காணப்படலாம் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் சக்திவாய்ந்த நாடு மூலோபாய வலிமையைக் காட்டினால், அமெரிக்கா அதைத் தடுக்கவும், முறியடிக்கவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போரில் அமெரிக்காவை யார் குறிவைப்பார்கள் என்று அவர் தெரிவிக்காததுடன் ஆனால் அது ரஷ்யா அல்லது சீனா போன்ற ஏதாவது ஒரு நாடாக இருக்கலாம் என கருத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
