பிரித்தானியா - பிரான்ஸை தாக்கும் வெப்பஅலை! ஐரோப்பாவில் சுகாதார எச்சரிக்கை
ஐரோப்பாவில் பிரித்தானியா (UK), பிரான்ஸ் ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று (19) முதல் அடுத்த வார முற்பகுதிய வரை கடும் வெப்பம் அலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இங்கிலாந்து பிராந்தியத்தின் பல பகுதிகளுக்கு, வெப்பநிலை சார்ந்த சுகாதார எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை இந்த சுகாதார எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கபட்டுள்ளதுடன் இன்று லண்டன் (Londoa) வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் அளவுக்கு உயரும் எனவும் எதிர்வரும் சனிக்கிழமை இது இன்னும் உயரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடும் வெப்பநிலை
இதேவேளை, ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவும் எனவும் எதிர்வரும் சனிக்கிழமை பாரிஸில் 35 பாகை செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் அறிவிக்கப்படடுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் இன்னும் கோடைகாலத்துக்கு நுழையாத நிலையில் ஜுன் மாதத்திற்கான வெப்ப நிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் 38 பாகை செல்சியஸ் அளவை தாண்டும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பழிக்குப் பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேல் வைத்தியசாலை மீது வெடித்துச் சிதறிய பாலிஸ்டிக் ஏவுகணை - பகீர் காட்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
