கனடாவிலுள்ள ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்
கனடாவில் தற்காலிகத் தங்குமிட ஆவணங்கள் கொண்ட 100,000 இற்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் விசாக்கள் இந்த ஆண்டுக்குள் காலாவதியாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனில் தொடரும் ரஷ்யத் தாக்குதலால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நிர்வாகத்திலான தடைகள் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு நேரம் காரணமாக உக்ரைன் அமைப்புகள் கனடிய அரசாங்கத்திற்கு விசாக்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
பலரது விசாக்கள்
கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை கடுமையாக தாக்கிய பிறகு, "Canada-Ukraine Authorization for Emergency Travel (CUAET)" என்ற திட்டத்தின் கீழ், கனடாவில் வசிக்கவும் வேலை செய்யவும் 300,000 உக்ரைனியர்களுக்கு மூன்றாண்டு விசா வழங்கப்பட்டது.
பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் பலரது விசாக்கள் இப்போது காலாவதியாக உள்ளன.
இதனால், CUAET பயனாளிகள் ஆன்லைன் மூலமாக மூன்றாண்டு நீட்டிப்பு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், விசாக் கோரிக்கைகள் பின்னடைவு அடைந்துள்ளதுடன் செயல்பாட்டு காலங்கள் நீண்டிருக்கின்ற நிலையில், உக்ரைனியன் கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், கனடாவில் உள்ள உக்ரைனியர்கள் நிலை நிச்சயமற்றதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
