பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பொருளாதாரத்தைச் சீர்செய்ய களமிறங்கிய உலக வங்கி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி விலைகளின் கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.
இதற்காக, மிக விரைவாக நிதி வழங்கும் கொள்கை சார்ந்த நிதி கருவிகளை (Fast-disbursing policy financing instruments) பயன்படுத்தப்போவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் உடனடி நிதி நிவாரணம், கொள்கை ரீதியான நிபுணத்துவம் மற்றும் தனியார் துறைக்கான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இப்பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கப் பெரிய அளவில் (At scale) உதவத் தயாராக உள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உட்கட்டமைப்புகள்
இதனடிப்படையில் போரினால் சிதைந்துள்ள உட்கட்டமைப்புகள் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளைச் சீர்செய்ய இந்த நிதிப் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தேக்கநிலையைச் சமாளிக்க உலக வங்கியின் இந்தத் தலையீடு, அரபு நாடுகளுக்கு ஒரு பெரிய நிமிர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |