பேராபத்தை எதிர்நோக்கியுள்ள குடிநீரின் நிலை - வெளியாகியுள்ள எச்சரிக்கை அறிக்கை!
மனிதர்களின் மிக அத்தியாவசிய தேவையாக உள்ள தண்ணீரின் நிலை உலகெங்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனமொன்று தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கனமற்ற தண்ணீர் பயன்பாடு, நீரின் தூய்மைத் தன்மை, அதிகரிக்கும் கடும் வெப்பநிலை ஆகியவற்றால் தண்ணீர் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக அந் நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
உலகம் கண்மூடித்தனமான ஆபத்தை நோக்கி நகர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் கிடைக்காது
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனில், உலகில் சுமார் 25 வீதமானவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காது என இந்த அறிக்கையின் முதன்மை எழுத்தாளர் ரிச்சர்ட் கானர் (Richard Connor) கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தண்ணீர் மாநாடு நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளதுடன், அதில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 6,500 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு கடைசியாக 1977ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.