உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று ஆரம்பமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிக புள்ளிகள் எடுத்த அணிகளான அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை ஐசிசி 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா- அவுஸ்திரேலியா
இதில் 9 அணிகள் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிக்கு 12 புள்ளியும், சமநிலைக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.
இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா வாய்ப்பை இழந்தது.
நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
