தொடருந்தில் மோதுண்டு யுவதி மரணம் - ஹட்டனில் சோகம்
Sri Lanka Police
Nuwara Eliya
Accident
Death
Hatton
By Nithusan
திம்புள்ள - பத்தனை காவல்துறை பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் இளம் யுவதியொருவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(19.08.2023) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி ஹட்டன் - குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி