நந்திக்கடலில் வீழ்ந்து இளைஞன் உயிரிழப்பு
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Vanan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மந்துவில் பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கிடைக்குமா.. து.ரவிகரன் விசனம்
விசாரணை
கோயிலுக்கு முன்னால் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்