வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Mar 20, 2026 01:08 PM GMT
Report

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, அதே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ். வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்

யாழ். வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்

மீட்பு நடவடிக்கை

வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது 2 அரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புறப்பட்ட நிலையில், இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிவந்ததுடன் வவுணதீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு | Young Mother Rescued From Well In Vavunatheevu

இந்த நிலையில் சம்பவதினமான இன்று(20) வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை காவல்பிரிவிலுள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில்; மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு பெண் மீட்கப்பட்ட போது அவர், கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக தெரிவித்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை, அவருடன் வந்த குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அழுகிய சடலம்

இதனை தொடர்ந்து காவல்துறை நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு | Young Mother Rescued From Well In Vavunatheevu

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, காவல்துறை மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடந்த மாதம் வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி : வங்கிகள் இயங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் நெருக்கடி : வங்கிகள் இயங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019