யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்
Sri Lanka Police
Jaffna
By Sathangani
யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே நேற்று (21) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த குறித்த இளைஞர் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3,600 மில்லிகிராம் ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள், அதனைப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
