யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
வடமராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 4 இலட்சம் ரூபா சந்தை பெறுமதி கொண்ட போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
புலனாய்வுப்பிரிவிற்கு (State Intelligence Service) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இன்று (2026.04.04) வடமராட்சி பகுதியில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள்
இதன்போது, கரணவாய் பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்ட இளைஞன் ஒருவரை நெல்லியடி காவல்துறையினர் கைது செய்தனர் சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 520 Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் தற்போதைய கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நெல்லியடி காவல்துறையினர், அவரை நாளை (2026.04.05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்
காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு
வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |