மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்சார இணைப்பை நிறுத்தும்போது
குறித்த இளைஞர் இன்று காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பதில் நீதவான் பாரிஸ் மரிக்கார் வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
வண்ணாத்திவில்லு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 

                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்