கல்கிசை இளைஞர் படுகொலை : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்
கொழும்பு (Colombo) - கல்கிசையில் (Mount Lavinia) கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (12.05.2025) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கல்கிசை, சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீடொன்றுக்கு முன்னால் இருந்த இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று நீ்ண்ட தூரம் ஓடியுள்ளார்.
ஆனால் துப்பாக்கிதாரிகள் இளைஞனை துரத்திச் சென்று நடுவீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிசைபிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
