வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 07பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் முகமாக கடற்படையினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக

இதேவேளை கடற்தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய அனுமதியற்ற வலை மற்றும் 02 டிங்கி படகுகளையும் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் முள்ளியனில் வசிக்கும் 21 முதல் 38 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களும் அவர்களது உடைமைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

