கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

Government of Canada Canada
By Sumithiran Sep 04, 2022 11:48 PM GMT
Report

 கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல்

கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் நேற்று (4) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம் | 10 Killed Dozen Others Injured Stabbings Canada

இரண்டு சந்தேக நபர்கள்

கனேடிய காவல்துறை தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

"சந்தேக நபர்கள் கறுப்பு நிற நிசான் ரோக் [வாகனத்தில்] இருக்கலாம்," என்று றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) அதிகாரி சஸ்காட்செவன் கூறினார், ஆண்களையோ அல்லது காரையோ பார்க்கும் எவரும் அவர்களில் இருந்து விலகி இருக்குமாறும் காவல்துறையை அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.  

கனேடிய பிரதமரின் அறிவிப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சஸ்காட்சுவானில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடத்தப்பட்ட தாக்குதல்களை "பயங்கரமான மற்றும் இதயத்தை உடைக்கும்" செயல் என்று விபரித்தார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்தவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். "நேசிப்பவரை இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன்," என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கனேடிய பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ, சஸ்காட்சுவான் குடியிருப்பாளர்களை " அவர்களது இடத்தில் தங்குமாறு" வலியுறுத்தினார்.

"சஸ்காட்செவனில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதிக்கு அருகாமையில் உள்ளவர்கள், தயவுசெய்து தமது இடத்தில் தங்கி பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலை பிரகடனம்

தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதியான ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனின் (JSCN) பழங்குடி சமூகத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது 

 காயமடைந்தவர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை

இதேவேளை காயமடைந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் பலர் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.

காயமடைந்தவர்கள் தொடர்பு கொண்டால் சம்பவத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழுமையான விபரத்தை பெறமுடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 




ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024