வவுனியாவில் நடந்த பயங்கரம்! திடீரென வீட்டிற்குள் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட திருடர்கள் - குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை
வவுனியாவில் வீடு ஒன்றில் தங்க நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதுக்குளம் தேவதளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் சத்தமாக குரைத்துக்கொண்டிருந்த நாய் ஒன்றினை வீட்டினைத்திறந்து வெளியே விட சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றது.
வீட்டின் வெளியே பதுங்கியிருந்த பத்திற்கு மேற்பட்ட திருடர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கிவிட்டு அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் உட்பட பதினோராயிரம் ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு , தப்பிச்சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட குறித்த சம்பவத்தில் குடும்பஸ்தவரான சிறீஸ்கந்தவாசன் (59 வயது) என்ற நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .