யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Sri Lanka Police Jaffna Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Mar 25, 2025 07:05 AM GMT
Report

புதிய இணைப்பு

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் மேற்படி சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital, Point Pedro) சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியிடம் வாக்கு மூலம்

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை காவல்துறையினர் ஊடாக மருதங்கேணி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | 10 Years Old Kid Attack By Gand In Jaffna

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் காவல்துறையினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற போது மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படும் பெண்ணின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு வீடு பூட்டி இருந்ததனால் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிடப்பட்டுள்ளது.

செய்திகள் - பிரதீபன்

யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வெடித்த சண்டை - வெளியேறிய சிறீதரன் எம்.பி

யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வெடித்த சண்டை - வெளியேறிய சிறீதரன் எம்.பி

முதலாம் இணைப்பு

யாழில் (Jaffna) 14 வயது சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கிய கொடூர  சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாய் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

இந்நிலையில் குறித்த சிறுமி கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | 10 Years Old Kid Attack By Gand In Jaffna

மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றுனை எடுத்து உண்டு கொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும் வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளார்.

மாலை நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

மாலை நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

வேதனை மற்றும் அவமானம் 

இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | 10 Years Old Kid Attack By Gand In Jaffna

குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு :சிக்கினர் பெண் உட்பட நால்வர்

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு :சிக்கினர் பெண் உட்பட நால்வர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020