சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இன்று (19.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகலவால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருக்கைப் பாதுகாப்புப் பட்டி
இந்நிலையில் இருக்கை பட்டி அணியாமல் பயணிப்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் விரைவுப் பேருந்துகளில் இருக்கைப் பட்டி அணியாது பயணிக்கும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் அபராதம் அறவிட சட்டப்பூர்வமான அனுமதி உள்ளது என்றும், இலங்கை மக்கள் இருக்கைப் பட்டி அணிவதன் அவசியத்தை வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிகழும் விபத்துக்களில் பாதுகாப்பு பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இருக்கைப் பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டம்பர் 19 ஆம் திகதியுடன் நிறைவடையுமென தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்திருநடதமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |