இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்! ரஷ்யா மீது ஒரே இரவில் ஏவப்பட்ட 1000 ட்ரோன்கள்
ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தலைநகர் மொஸ்கோவை நோக்கி ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோமீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலை இதுவரை இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என மொஸ்கோ மேயர் வர்ணித்துள்ளார்.
மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள்
இந்த தாக்குதலில் மொஸ்கோஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டடம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொஸ்கோ நகருக்கு எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காணப்படுகிறது.
மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த தாக்குதலில் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Pelican ஏவுகணைகள்
உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo மற்றும் Pelican ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தளவாட வசதிகளை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வசதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |