இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உடனடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜப்பானில் வேலை வாய்ப்பு
இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு அந்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுதொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்ற ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் வழங்கியுள்ளது.
ஆயிரம் வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம்
ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் குறித்த நிறுவனம் ஆயிரம் வேலைவாய்ப்பிற்கான சான்றிதழை கையளித்து உத்தரவாதம் அளித்துள்ளது.
அத்துடன் இந்த வருட இறுதிக்குள் இலங்கையிலிருந்து 150 தாதியர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் ஜீ.ரீ.என் என்ற வெளிநாட்டு வேலைவாய்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில். ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்றுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.