10 நாட்களுக்குள் 10,000 கட்டில்களை ஏற்பாடு செய்ய பாரிய முயற்சி
corona
sri lanka
basil rajapaksha
By Shalini
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பத்து நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படுமென பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.