இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்கள்
இலங்கைக்கு வரவுள்ள ரஷ்ய (Russia) சுற்றுலாப் பயணிகள் மூலம் பல மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.
இன்று (28) முதல் ரஷ்யாவிற்கு சொந்தமான ரெட்விங்ஸ் எயர்லைன்சில் (Red Wings Airlines) 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொஸ்கோ (Moscow) உட்பட ஆறு ரஷ்ய நகரங்களில் இருந்து வாரத்திற்கு ஆறு விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மத்தள விமான நிலையம்
மேலும் அடுத்த வருடம் மே மாதம் 6ம் திகதி வரை இந்த விமானங்கள் அம்பாந்தோட்டை (Hambantota) விமான நிலையத்திற்கு வரும் நிலையில் 68,000 சுற்றுலாப் பயணிகள் மூலம் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும் என தெரிவித்தார்.
2022 இல் தான் ரெட்விங்ஸ் மூலம் 94,795 சுற்றுலாப்பயணிகளை ரஸ்யாவிலிருந்து கொண்டுவந்ததாகவும் மத்தள விமான நிலையம் (Mattala Rajapaksa International Airport) ஊடாக இலங்கைக்கு வந்த இவர்கள் மூலம் 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் 9 வருடகால அரசியல் பழிவாங்கலை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |