சமூக ஊடகங்களில் பிரபல்யமாகியுள்ள 103 வயது மூதாட்டி! இதுதான் காரணம்
Corona
Vaccine
Badulla
SriLanka
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகி்றது.
இந்நிலையில் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசிகளை மும்முரமாக வழங்கிவருகின்றது.
நேற்றைய தினம் பதுளையைச் சேர்ந்த 103 வயதுடைய பெண் முதியவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டிற்கே சென்ற சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகின்றது.
அத்துடன் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதுடைய ஒருகாலை இழந்த பெண் ஒருவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
