கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்! காவல்துறை வெளியிட்ட தகவல்
இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒன்றிணைந்த நாடு என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் இரண்டு சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
EQYFWW6
சட்ட நடவடிக்கைகள்
எனினும், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |