வெளிநாடொன்றில் துயரம்: தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து தொழிலாளர்கள் மரணம்
சூடானில்(sudan) தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விபத்து
இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுரங்கப் பணியை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. சூடானில் மோசமான பாதுகாப்பு காரணமாக இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
வருடாந்தம் ஏற்படும் விபத்து
கடந்த 2021ஆம் ஆண்டு 38 தொழிலாளர்களும், 2023ஆம் ஆண்டு 14 தொழிலாளர்களும் இதுபோன்ற சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, சூடானின் தங்கத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சுமார் 1.5 மில்லியன் சுரங்கத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இது 2024இல் மொத்தம் 64 தொன்களாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
