வெளிநாட்டவர்கள் 113 பேருக்கு இலங்கையில் இடம்பெற்ற கொடுமைகள்!
இவ் வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 113 பேர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக, இலங்கையில் அவர்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுக்கள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாகாணத்தில் இவ்வாறான பிரச்சனைகளை முகங்கொடுத்துள்ளனர்.
முறைப்பாடுகள்
இவற்றில் 65 முறைப்பாடுகள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டவை, இதில் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் ஐரோப்பியர்களும், 21 பேர் ரஷ்யர்களும் மற்றும் 6 அமெரிக்கர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த வருடத்தின் 4 மாதங்களில் 13 வெளிநாட்டுப் பெண்கள் இலங்கையர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 ஐரோப்பிய பெண்களும், ஜப்பானிய சிறுமி ஒருவர் உட்பட 2 ரஷ்ய சிறுமிகளும் உள்ளடங்கும்.
இதேவேளை, 13 வெளிநாட்டவர்கள் தாக்குதல்கள், காயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
பயணங்களின் போது மோசடிகள் மற்றும் பல்வேறு கொள்ளைகள் தொடர்பாக 20 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
