நைஜீரியாவில் கொடூரம்: 12 வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொலை
நைஜீரியாவில் (Nigeria) ஆயுதக் கும்பலால் 12 வனத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செ்யதி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் வடமத்திய குவாரா மாகாணத்தில் உள்ள ஓகே-ஓடே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காவல்துறை காவல்துறை செய்தித் தொடா்பாளா் அடெடவுன் எஜிரே-அடேயமி கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை
மேலும் தெரிவித்த அவர், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியில் இருந்து நான்கு போ் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட மோதல்
வடக்கு பகுதியில், நிலம் மற்றும் நீருக்காக விவசாயிகளுக்கும் மற்றும் புலானி மரபினரான நாடோடிகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
