கிளிநொச்சியில் 14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறையினர் ( படம்)
girl
Kilinochchi
missing
By Vanan
கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பழைய கச்சேரி வீதி, கிளி நகர் பகுதியில் வசிக்கும் செந்தூரன் பகலினி என்ற 14 வயதுடைய சிறுமியே கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சிறுமி தொடர்பாக பெற்றோரிடம் வினவியபோது, கடந்த 17 ஆம் திகதி மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், தங்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.