யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கரவெட்டி - மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக்கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்