சிறுமி துஷ்பிரயோகம் - தாயும் சகோதரியும் கைது! தப்பி ஓடிய கணவர்
கிழக்கு இலங்கையில் சகோதரியின் கணவன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான சகோதரியின் கணவன் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து 7 மாத கர்ப்பிணியாக்கியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோதரியின் கணவர் தலைமறைவாகியதை அடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரி உட்பட இருவரை நேற்று கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்துள்ளார்.
தலைமறைவாகிய நபரை காவல்துறையினர் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ( 54 வயது) மற்றும் சிறுமியின் சகோதரி ( 24 வயது) ஆகிய இருவரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்ததுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக குற்றத்தடுப்பு காவல்துறை பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.