யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இது குறித்து பல்வேறு தப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் ஐபிசி தமிழின் The Opinion நிகழ்ச்சி இவ்வாறு ஆராய்கின்றது.
அதன்படி, துப்பாக்கிச்சூட்டால் ஒருவரை படுகொலை செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். மனித உரிமைகள் சார்ந்து இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும்.
குறிப்பாக உயிரிழந்த சிறுவன் தொடர்பில் கடந்த காலத்தில் எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் எதிர்காலத்தில் அவரை ஒரு குற்றவாளியாக தீர்ப்பு வழங்க முடியாது.
துப்பாக்கிச் சூடு என்பது மனித உரிமை விடயம் சார்ந்த விடயமாகும். இலங்கையினுடைய சட்டங்களின் அடிப்படையில் எந்தவொரு சட்டத்திலும் நேரடியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்வதற்கு அதிகாரமில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள குற்றவியல் சட்டத்தரணி சிறிகாந்தா ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |