பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு பிணை அனுமதி!
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினரால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மேலதிக நீதிவான்
விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று (12) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு வழக்கை தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |