சட்டவிரோத இணையவழி நடவடிக்கை: நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
காலியில் சட்டவிரோத இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தைக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாவதாக காலி - கல்வடுகொட காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியப் பிரஜைகள்
இதன்போது 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்ததாக காலி - ஹிக்கடுவை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 55 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மிதிகம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 28 இந்தியப் பிரஜைகளும் ஐந்து நேபாளப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி