ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி...!
கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உலகின் மிக பரபரப்பான கடல்சார் வழித்தடங்களில் ஒன்றில் கப்பல்கள் எதிர்கொண்டு வரும் அதிகரித்து வரும் அழுத்தத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்களில், இரண்டு சரக்குக் கப்பல்களும் ஒரு எண்ணெய் விநியோகக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறியதுடன், இரண்டு எண்ணெய் விநியோகக் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் அதற்குள் நுழைந்துள்ளன.
கப்பல்களின் எண்ணிக்கை
கடந்த சில நாட்களாகக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் கடந்த சில நாட்களின் கடப்பு விகிதங்களுடன் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துச் சரக்குகளுக்கும் 20% கட்டணம் (Fee) விதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இது இப்பிராந்தியத்தில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஒரு அழுத்தமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |