முதல் டெஸ்ட் :சொந்த மண்ணில் இந்தியாவை சுருட்டியது தென்னாபிரிக்கா
கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
124 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுக்க முடிந்தது (9 விக்கெட்டுகள்).
இந்திய அணியின் தலைவர் ஷுப்மன் கில் காயம் காரணமாக விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா தனது முதல் இனிங்ஸில் 159 ஓட்டங்கள் எடுத்தது, அதே நேரத்தில் இந்தியா முதல் இனிங்ஸில் 189 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் வெற்றி இலக்கு
பின்னர் தென்னாபிரிக்கா தனது இரண்டாவது இனிங்ஸில் 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இந்தியாவுக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணி இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல, கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்