சிறிலங்கா அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி காணி சுவீகரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
சிறிலங்காவின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கலல்கொட பிரதேசத்தில் காணிகளை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கெக்கிராவ மற்றும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
அமைச்சர் பணிப்புரை
இதேவேளை அவர்களிடமிருந்து டிப்பர் இயந்திரம் மற்றும் மண் அகழ்வு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான அனுமதியற்ற காணி நிரப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து கூட்டுத்தாபனத்தின் விசேட நடைமுறைப்படுத்தல் பிரிவு 24 மணி நேரமும் செயற்படவுள்ளதாகவும், ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அல்லது மீள் நிரப்பு நடைபெற்றால், அதுபற்றி பொதுமக்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் 011-2885357 அல்லது 011-2868002 ஆகிய எண்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்