இன்று இடம்பெற்ற கோர விபத்து : மாணவர்கள் உட்பட மூவர் பலி!
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka Police Investigation
School Children
By Sathangani
குருணாகல் (Kurunegala) - குளியாப்பிட்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குளியாப்பிட்டி - நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறித்த வானின் சாரதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன் இந்த விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்