கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தை கல்நேவா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை
குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து, குழந்தையைத் தேடும் நடவடிக்கையை நேற்று (23.08.2026) ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது, வீட்டிற்கு அருகே செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக குழந்தை கல்நேவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில் சடலம் கல்நேவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |