2024 சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை (05) முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் அதிபர் ஊடாகவும் தனியார் விண்ணப்பதாரர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் உரிய அறிவுறுத்தல்களின்படி தங்கள் விண்ணப்பங்களை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவுறுத்தல்
தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியும், தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்து சமர்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 17 மணி நேரம் முன்