நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை மையங்களில் குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (DOE) தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சை மண்டபங்கள்
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சையின் இரண்டாம் வினாத்தாள் காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரையில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் வினாத்தாள் இடைவேளையின் பின்னர் காலை 11:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரையிலும் நடைபெறும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்