குவைத்தில் தங்கியிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்துள்ளனர்.
குறித்த நாடு கடத்தும் நடவடிக்கை இன்று (20.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக குவைத் சென்றிருந்த நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணியாற்றியபோது கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இவர்கள் இன்று அதிகாலை 3.10 மணியளவில் குவைத் நகரிலிருந்து ஜசீரா விமான சேவைக்குச் சொந்தமான J9-551 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கி, அவர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தப்பட்டவர்களில் வீட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |