திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Mattala International Airport
By Dhilak
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன.
இந்த நிலையில், குறித்த விமானங்களில் சிலவற்றில் இந்த நபர்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய குற்றவாளிகள்
இந்த பாதாள உலக உறுப்பினர்களில் “மகாவத்த சாமர” மற்றும் “குடு துமிந்த” ஆகியோரும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இதன்படி, மகாவத்த சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி