இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்டது கொரோனா மரணங்கள்
corona
death
sri lanka\\
By Shalini
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 215 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சின் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,828ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.