வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Child Abuse
By Shalini Balachandran Aug 12, 2024 03:04 PM GMT
Report

மூன்றாம் இணைப்பு

மொனராகலை - தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய 17 மாணவர்களில் 14 பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இரண்டாம் இணைப்பு

மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு

மொனராகலை (Moneragala) மாவட்டம் தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 17 பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு பலவந்தமாக மதுபானத்தை வழங்கியதாக குறித்த சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

கர்ப்பமடைந்த சிறுமி 

இந்தநிலையில், சிறுமி குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள் அந்த காணொளியை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 22 Students Molested 19 Year Old Student  

மேலும், சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 16 மாணவர்கள் குறித்த சிறுமியை  வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தமையினால் ராகமை வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!

மேலதிக விசாரணை

இந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள், சிறுமியை ராகமையிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளதோடு சிறுமி குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து ராகமை வைத்தியசாலை நிர்வாகத்தினால் புத்தல காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 22 Students Molested 19 Year Old Student

இந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த புத்தல காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026