கிளிநொச்சியில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு!
கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தலைமையில் நேற்று (11-08.2026) குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகள்
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை சார்ந்த அதிகாரிகள், துறைசார் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மாவட்டத்தின் கடற்றொழில் துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |