22 தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை!
Indian fishermen
Tamil nadu
Sri Lanka Navy
Rameswaram
By Theepan
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தேவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படங்களுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடனும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் ஊர்காவல்துறை மற்றும் மனனார் நீதவான் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |