நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

Sri Lanka Police STF Negombo Prisons in Sri Lanka
By Sathangani Jul 06, 2026 11:04 AM GMT
Report

புதிய இணைப்பு

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

மேலும்  மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இருபத்தாறு ஆகும்.

இலங்கை இராணுவம், காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர்.

[நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு! | 25 Killed Today S Violence At Negombo Prison]

இந்த பதற்றமான சூழ்நிலை நேற்று (05) காலை தொடங்கி மாலையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவாக, இன்று (06) இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

UPDATE நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் : 25 பேர் பலி! 13 பேர் கவலைக்கிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்ட போது கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயற்சித்தனர்.

மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

 உறவினர்கள் கோரிக்கை 

அத்துடன் இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு! | 25 Killed Today S Violence At Negombo Prison

இதற்கிடையில், சிறைக்கு வெளியே கூடியுள்ள கைதிகளின் உறவினர்கள், அவர்களை வெளியே அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : விசேட விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : விசேட விசாரணைக் குழு நியமனம்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026