கத்தியால் குத்தப்பட்டு இளைஞன் கொடூர கொலை - கிளிநொச்சியில் சம்பவம்!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
கிளிநொச்சி காவல்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவரது வீட்டினுள் புகுந்த நபர்கள் கத்தியால் அவரை பலமாகத் தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம், கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கத்திக் குத்து
கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த இளைஞர் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு கத்தியால் தாக்கப்பட்டு இறந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்