குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்

Sri Lanka
By Raghav Feb 10, 2025 10:27 AM GMT
Report

மூதூர் - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (11.02.2025) நினைவுகூரப்படவுள்ளது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 29 ஆண்டுகளுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் நீதி கோரி வரும் நிலையில் இன்றைய தினம் (10.02.2025) குறித்த படுகொலையின் 29ஆவது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கின்றார்கள்.

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் : சாணக்கியன் எம்.பியின் வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் : சாணக்கியன் எம்.பியின் வேண்டுகோள்

அத்துமீறி நுழைந்த ஆயுததாரி

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் | 29Th Anniversary Of The Kumarapuram Massacre

இக் கொடூர சம்பவம் 1996.02.11ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்: நிதியமைச்சு எடுக்கவுள்ள முடிவு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்: நிதியமைச்சு எடுக்கவுள்ள முடிவு

வழக்கு விசாரணை

பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் | 29Th Anniversary Of The Kumarapuram Massacre

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  1. சுப்பையா சேதுராசா
  2. அழகுதுரை பரமேஸ்வரி
  3. அருமைத்துரை வள்ளிப்பிள்ளை
  4. கிட்ணன் கோவிந்தன்
  5. அருணாசலம் தங்கவேல்
  6. செல்லத்துரை பாக்கியராசா
  7. வடிவேல் நடராசா
  8. இராஜேந்திரம் கருணாகரம்
  9. சண்முகநாதன் நிதாந்தன்
  10. இராமஜெயம் கமலேஸ்வரன்
  11. கந்தப்போடி கமலாதேவி
  12. சிவக்கொழுந்து சின்னத்துரை
  13. சிவபாக்கியம் நிசாந்தன்
  14. பாக்கியராசா வசந்தினி
  15. அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி
  16. தங்கவேல் கலாதேவி
  17. ஸ் ரீபன் பத்துமா
  18. சுந்தரலிங்கம் பிரபாகரன்
  19. சுந்தரலிங்கம் சுபாஜினி
  20. கனகராசா சுவாதிராசா
  21. சுப்பிரமணியம் பாக்கியம்
  22. விநாயகமூர்த்தி சுதாகரன்
  23. ஆனந்தன் அன்னம்மா
  24. விஜயகாந் லெட்சுமி 
  25. அருமைத்துரை
  26. தனலெட்சுமி ஆகியோர் உட்பட 26பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல்

அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல்

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது..! ஒற்றைக் காலில் நிற்கும் அநுர அரசு

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது..! ஒற்றைக் காலில் நிற்கும் அநுர அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026