துறைமுகத்தில் தேங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka vehicle imports sri lanka
By Sathangani Jan 14, 2026 05:20 AM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருவதாகவும் இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் : அநுரவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் : அநுரவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

புதிய வரித் திருத்தங்கள் 

அதன்படி, வாகனங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு, நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரித் திருத்தங்கள் மற்றும் மேலதிக தண்டப்பணங்கள் (சுமார் 50 வீத கூடுதல் வரி) காரணமாகவே இந்தச் சிக்கல் எழுந்துள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | 300 New Imported Vehicles Arrive Hambantota Port

வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள வாகன வியாபாரிகள் அல்லர், மாறாகத் தமது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி குடும்பத் தேவைக்காக எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் முறையின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்த சாதாரண பொதுமக்களாவர்.

வாகனத்தின் உண்மையான விலையை விட மூன்று மடங்கு அதிகமான வரியைச் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் கோருகின்றது.  சில வாகனங்களுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தீ வைக்கப்பட்ட கட்சி அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் தீ வைக்கப்பட்ட கட்சி அலுவலகம்

நீதி பெற்றுத்தர வேண்டும் 

நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றினோம், ஆனால் இப்போது தண்டிக்கப்படுகிறோம், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலையிட்டு தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்தனர்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | 300 New Imported Vehicles Arrive Hambantota Port

இது குறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, “இந்த வாகனங்கள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் தொடர்பான வழக்குடன் தொடர்புடையவை.

தற்போது உரிமையாளர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண வரியைச் செலுத்தி வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், நீதிமன்ற வழக்கு முடியும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய முடியாது. விதிமுறைகளை மீறியதற்கான தண்டப்பணத்தைச் செலுத்தி, உடனடியாக வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.

சமீபத்திய சூறாவளி காரணமாகத் துறைமுகத்தில் உள்ள வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.” என தெரிவித்தார்.

இலங்கை மீது ஐ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு : வெளியான அறிக்கை

இலங்கை மீது ஐ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு : வெளியான அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்